Powered By Blogger

Monday 11 April 2016

நீராற்றுவதற்கு ஒரு புதிய மாற்று வழி  

                             
                   
     வழக்கமாகக் கான்கிரீட்டைப் பக்குவமடைய வைக்க என்ன செய்கிறோம்? பலகைகளைஅடைத்து முட்டுக்கொடுத்து அந்தப் பரப்பின் மேல் கான்கிரீட் கலவையைக் கொட்டுகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குப் பரப்பின் மேல் தண்ணீர் தேங்கி நிற்குமாறு செய்கிறோம். அப்புறம் முட்டுப் பலகைகளை விலக்கிக் கொள்கிறோம்.இதுதான் காலகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் முறை.
          இப்படித்தான் நாம் கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துகிறோம். இது போதுமானதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கான்கிரீட் தயாரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டசிமெண்ட், மணல், கம்பி எல்லாமே தரமானவையாக இருந்திருக்கலாம். ஆனால் நீராற்றும் வேலையை முறையாகச் செய்தால்தான் கட்டடம் வலுவுள்ளதாக இருக்கும். இதில் குறைவைத்தோமானால் கட்டடத்தின் ஆயுள் குறையத்தான் செய்யும். கான்கிரீட்டின் உட்பகுதியில் இருக்கும் தண்ணீர் மெல்லியதுளைகள் வழியாக மேலே உயரும். இப்படி உயரும் நீரானது ஆவியாகி மறைந்து போகும். அவ்வாறு நேராமல் இருப்பதற்காகத்தான் கான்கிரீட் பரப்பின் மேல் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.தண்ணீர் தேங்கி நிற்பதால் கான்கிரீட்டின் மேல் தூசி படிவதும் தடுக்கப்படுகிறது.
       சுருங்குதல் முதலிய குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன.    விதவிதமான வழிமுறைகள்நீராற்றும் வேலையைச் செய்ய பல வழிகள் பின்பற்றப்ப கின்றன.கான்கிரீட் தளத்தின் மேல் பாத்தி கட்டி தண்ணீரைத் தேக்குவது, தண்ணீரைத் தெளிப்பது, ஈரக் கோணிகளைக் கொண்டு மூடி வைப்பது, பாலிதீன் தாள்களைப் பரப்புவது, இப்படிப் பல வழிகளில் நீராற்றல் வேலையைமேற்கொள்கிறோம்.
      இந்த வழிமுறைகள் பொருத்தமான வைதானா? இந்த வகையில் செயல்பட அதிக நேரம் தேவைப்படும். உடல் உழைப்பும் அதிகமாக ஆகும். அதனால் கூலிச் செலவும் அதிகரிக்கும். தேவைப்படும் தண்ணீரின் அளவு கணிசமானதாக இருக்கும்.நீராற்றும் காலமும் அதிகமாக அமையும். தண்ணீர் ஆவியாக வறண்டுவிட்டால் வெடிப்புகள் தோன்றும்.மாற்று வழிவழக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீராற்றும் வேலையைச் செய்வதில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன.          
           கான்கிரீட் கலவை இடப்பட்ட உடனேயே அதன் மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும். இதற்குப் பதிலாக அக்ரிலின் எமல்ஷன் வகையிலான பூச்சுக்களைக் கான்கிரீட் பரப்பின் மேல் பூசலாம். இந்த வகைப் பூச்சை ஏற்படுத்துவதற்குத் தூவல் முறையைப் பின்பற்றலாம். அல்லது பெயின்ட் அடிப்பதைப் போல் பிரஷ் கொண்டும் பூசலாம்.கான்கிரீட் ஆனாலும் கலவை ஆனாலும் இவ்வாறு ஒரே ஒரு முறை செய்தால் போதும். ஆரம்ப கட்டத்தில் இறுகும் வேலை நடக்கும் போது இது சரியான அணுகுமுறையாக இருக்கும். பூசப்படும் பூச்சு கான்கிரீட் பரப்பின்மேல் சீரான படலமாகப் பரவும். இந்தப் படலம் கான்கிரீட்டிற்குள் இருக்கும் தண்ணீர் வீணாக ஆவியாகி வெளியேறிவிடாமல்தடுக்கும் வேலையைச் செய்யும்.
         கான்கிரீட் வெகு விரைவில் உலர்ந்து போகாமல் காக்கும். இதனால் வெடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். கான்கிரீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் வெளியேற வகையில்லாமல் சிறைப்படுத்தப்படும். ஆகவே, கான்கிரீட் நன்கு இறுகிக் கெட்டிப்படும். அதுதானே நமக்குத் தேவை?
Civil படித்துவிட்டு, என்னமாதிரி வேலை செய்யலாம்?

                                       

     பலருக்கு இந்தக் கல்வியின் கவனம் திரும்பாதது,அறியாமையின் அவதாரம்.சிவில் இன்ஜினியர் என்றால் வீடுகட்டுபவர், அல்லது PWD போன்ற துறைகளில் வேலை செய்பவர் என்ற ஒரு தலைப்பட்சக்கணிப்பு உள்ளது. இது தவறு.சிவில் இன்ஜினியர் பல வேலைகளைப் பார்க்க முடியும்?கட்டடம் அமைக்கவுள்ள தேவைகளை, பொருட்களை நிர்ணயம் செய்யும் அளவாளர் (Quantity Surveyor)நிலம் அளவு நிர்மாணிப்பவர் (Land Surveyor),கட்டடம், இடம் வடிவம் செய்பவர் (Design Engineer),இடப் பொறியாளர்(SiteEngineer),திட்ட மேலாளர் (Project Manager),பாலம்கட்டும் பொறியாளர் (Bridges Engineer),சாலைப் பொறியாளர் (Road Engineer),போக்குவரத்துப்பொறியாளர் (Transport Engineer)கடல் வாழ் கட்டடம் அமைப்பவர் (Marine Construction),பூகோள-நுணுக்க பொறியாளர் (Geo Technical Engineer), கடலைத்தூற்றி நிலமாக்கும் பொறியாளர் (Reclamation Engineer), ஒப்பந்த மேலாளர் (Contract Manager)வாணிப மேலாளர் (Commercial Manager),உற்பத்தியாளர் (Producer),ஒப்பந்தக்காரர் (Contractor),யோசனை - டிராயிங், கட்டட சூப்பர்விசன் செய்பவர் (Consultant) இப்படிச் சொல்லில் அடங்காத எண்ணற்ற சேவைகளைப் புரியலாம். தெரியுமா உங்களுக்கு?- நானும் ஒரு சிவில் Engineer என்பதில் பெருமைபடுக.

Saturday 9 April 2016

                                       Important Measurements

1 Yard          = 36 inch
1 Yard          = 3 feet
1 Yard          = 0.9144 meter = 1 mtr.
1 sq Yard     = 0.83612 Sq meter.
1 sqYard      = 9 sq feet.
1 Sq yard     = 1296 Sq inch.
1 Meter        = 1.0936 Yards.
1 Meter        = 39.370 inch.
1 Meter        =3.280 feet.
1 Sq meter   = 1.1959 Sq yard.
1 Sq meter   = 1550 Sq inch.
1 Sq Meter   = 10.763 Sqfeet.
1 feet           = 0.304 meter.
1 feet           = 0.333 yards.
1 feet           =12 inch
1 Sq feet      = 0.111 Sq Yard.
1 Sq feet      = 0.09290 Sq Meter.
1 Sq feet      = 144 Sq inch.
1 inch          = 2.54 cm.
1 Inch          = 0.0254 meter.
1 Inch          =0.0277 yards.
1 Inch          = 0.0833 feet.
1 Sq Inch    =0.00064516 Sq Meter.
1 Sq Inch    = 0.00077160 SqYards.
1 Sq Inch    = 0.00694444 Sq feet.
1 Acre        =4046.86 Sq Meter.
1 Acre        = 4840 Sq yards.

1 Acre        = 43560 Sq feet.
Conversion Table


                

கான்கிரீட் கூரை; கவனம் வேண்டும்


                     

   வீடு கட்டும் பணிகளில் சென்ட்ரிங் முக்கியமானது. இந்தப் பணி முன்பெல்லாம் திருவிழாபோல நடக்கும். இந்தப் பணி நடக்கும் நாளில் பணியாளர்கள் அதிகம்பேர் வருவார்கள். வேலை துரிதமாக நடக்கும். சப்பாடு, டீ, கொறிப்பதற்குத் தின்பண்டம் எல்லாம் வேலையாட்களைத் தேடி வரும். இந்த வேலை முடிவடைந்தால் வீடு கட்டுவதில் முக்கால்வாசி தாண்டிவிட்டதாகச் சொல்வார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியில்தான் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
   கான்கிரீட் இடுவதற்கு முன், அந்தப் பகுதியை முழுமையாகச் சோதிக்க வேண்டும். பலகை அடைக்கும் வேலைகள் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பலகை அடைப்பின் அளவு, வடிவம் ஆகியவற்றையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கலவை வழிந்து வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்கும், வீணாவதைத் தடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
சென்ட்ரிங் பாரத்தைத் தாங்கும் முட்டுக் கம்புகள் சரியான விதத்தில் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் இணைப்புகள் வலுவாக இருப்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
   கான்கிரீட் போடுவதற்கு முன்பாக முக்கியமானது கம்பி கட்டும் பணி. கம்பி கட்டும்போது தரமான, தேவையான அளவு தடிமன் உள்ள கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இப்போது ரெடிமேட் கம்பிகள் சந்தையில் கிடைக்கின்றன. நம் தேவையைச் சொன்னால் தொழிற்சாலையில் நமக்குத் தேவையான அளவுடன் கொண்டுவந்து இறக்கிவிடுவார்கள். இதனால் கம்பிகள் வீணாவது குறையும். வேலையும் சுலபமாக நடக்கும். தேவையைப் பொறுத்து இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கம்பி கட்டிய பிறகு மேலே நடப்பது நல்லதல்ல. அதனால் கம்பி கட்டு அளவை விட்டு விலகித் தாழ்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. கம்பி கட்டும்போது மின்சார ஒயர்கள் கொண்டு செல்ல வசதியாக பிளாஸ்டிக் பைப்புகள் பதிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் மின் விசிறிகள், ஊஞ்சல், தொட்டில்கள் ஆகியவை பொருத்துவதற்காக ஊக்குகள் தேவையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
   இப்பணியில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் கான்கிரீட் கலவை. அது தரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதித்து அறிய வேண்டியது அவசியம். சிமென்ட், ஜல்லி, மணல், தண்ணீர் ஆகிய நான்கும் சரியான அளவில் கலக்கப்படுகின்றதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும். கான்கிரீட் போட்ட பிறகு தளத்தின் மேற்பரப்பு வழவழப்பாக இருக்கக் கூடாது. காரணம் இதனால் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதைத் தடுக்க துடைப்பம் கொண்டு தேய்த்துவிட வேண்டும். அதுபோல கான்கிரீட் கலவை சமமின்றி மேடாகவும் பள்ளமாகவும் இருக்கும். இதைச் சரிசெய்ய மட்டப்பலகை வைத்துத் தளத்தைச் சமப்படுத்த வேண்டும்.
   அதுபோல கான்கிரீட்டில் கட்டிகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கலவையைச் சீராக இட முடியும். வெடிப்புகள் இருந்தால் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். சிறிய குறைபாடுகளைக் கூட கவனமாகப் பார்த்துச் சரிசெய்ய வேண்டும். கான்கிரீட்டுக்குள் காற்று, வெற்றிடங்களை உருவாக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுச் செலவைக் கட்டுப்படுத்த...

                     

   வீடு கட்ட வேண்டும் என்பதைப் பலரும் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் வாங்கும் வருமானத்தில் வீடு கட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. வீட்டுக் கடனை நம்பித்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை நடுத்தரவர்க்கத்தினருக்கு இருக்கிறது. வீட்டுக் கடன் வாங்கினாலும் வங்கிகள் 80 சதவீதம் மட்டும்தான் அளிக்கின்றன. மீதி 20 சதவீதத்தை சேமிப்பில் இருந்தோ கடன் வாங்கியோதான் சமாளிக்க வேண்டும். இவ்வளவு சிரமப்பட்டு கட்ட நினைக்கும் வீட்டை மிகச் சிக்கனமாகக் கட்டினால்தானே நல்லது?
வீட்டுக் கட்டுமானச் செலவைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளின்படி வீடு கட்டினால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது; செலவும் மிச்சமாகும். கட்டுமானப் பொருள்களைப் பொறுத்த அளவில், ஸ்டெப்ளைஸ்டு கம்ப்ரஸ்டு எர்த் ப்ளாக்ஸ், ப்ளை ஆஷ் ஜிப்சம் ஸ்டெப்ளைஸ்டு மட் ப்ளாக்ஸ், ப்ளை ஆஷ்-லைம் ஜிப்சம் தயாரிப்புகள், க்ளே ரெட் மட் பர்ன்ட் செங்கல், கான்கிரீட் ப்ளாக் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.
   அஸ்திவாரத்தை எழுப்ப ஆகும் செலவு வீட்டின் மொத்தக் கட்டுமானச் செலவில் 10 முதல் 15 சதவீதம்வரை பிடித்துக்கொள்கிறது. ஆகவே செம்மண் போன்ற சாதாரண மண் கொண்ட நிலத்திற்கு இரண்டு அடிகள் ஆழ அஸ்திவாரம் போதுமெனவும் ஆர்ச் பவுண்டேஷன் முறையைக் கையாள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. கரிசல் மண் போன்ற மென்மையான மண் கொண்ட நிலத்தில் அண்டர் ரீம் ஃபைல் பவுண்டேஷனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. இதன் மூலம் அஸ்திவாரம் அமைக்கும் செலவில் 20-25 சதவீதத்தை மிச்சப் படுத்த முடியும் என்றும் கூறுகிறது.
   ஆர்ச் பவுண்டேசன் என்பது பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறை. இம்முறையில் அஸ்திவாரத்தின் ஆழத்தைப் பெருமளவில் குறைத்துவிடலாம். என்றாலும் அஸ்திவாரத்தின் அடிப்பகுதியைத் தாங்கு சுவரெழுப்பிப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் கட்டிடத்தின் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அஸ்திவாரம் உறுதியுடன் விளங்க இது அவசியம்.
நில மட்டத்திற்கு மேல் ஒரு அடி உயரத்திற்கு 1:6 என்னும் விகிதத்திலான சிமெண்ட் கலவையால் ஆன அடிப்பீடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக அடிப்பீடம் அமைக்கப் பயன்படும் நான்குக்கு ஆறு அங்குலம் என்னும் அளவிலான ஸ்லாபுகளைத் தவிர்த்துவிடலாம். அதற்குப் பதில் செங்கற்களைப் பயன்படுத்தலாம். இந்த முறையைப் பயன்படுத்தினால் அஸ்திவாரச் செலவை 35-50 சதவீதம் குறைக்கலாம்.
   சுவர்களைப் பொறுத்தவரை எலிப்பொறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சுவர்களுக்கு உறுதி கூடும். கிராதி செங்கற்களையும் சுவர்களுக்குப் பயன்படுத்தலாம். வெப்ப மயமான இடங்களில் வழக்கமான செங்கற் களால் சுவர்களை எழுப்புவதைவிட கிராதிச் செங்கற்களைப் பயன்படுத்தும்போது செலவும் குறையும் வீட்டுக்குத் தேவையான வெளிச்சமும், காற்றும் கிடைக்கும்.
  கூரைகளைப் பொறுத்தவரை, வழக்கமாக ஆர்சிசி ஸ்லாப்பைப் பயன்படுத்துவதற்குப் பதில் ஃபெர்ரோ சிமெண்ட் சேனல், ஜாக் ஆர்ச், ஃபில்லர் ஸ்லாப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் ஆர்சிசி ஸ்லாப்களில் அதிகமான அளவுக்கு கான்கிரீட் வீணாகிறது மேலும் இந்த ஸ்லாப்கள் காரணமாகக் கட்டிடத்தின் சுமையும் கூடுகிறது. எனவே எடை குறைவான பொருள்களைக் கொண்டு கட்டிடத்தின் கூரையை அமைப்பதன் மூலம் செலவையும் குறைக்கலாம்.
  கட்டிடத்தின் சுவர்கள் வழியே அஸ்திவாரத்திற்குக் கடத்தப்படும் எடையும் குறையும். ஃபில்லர் ஸ்லாப்களைப் பயன்படுத்திக் கூரையை அமைக்கும்போது 15-25 சதவீதம் செலவை மிச்சப்படுத்தலாம். ஆனால் தகுந்த வடிவமைப்புப் பொறியாளரின் பரிந்துரையின் பேரிலேயே கட்டுமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவவறு உள்ளூர்த் தொழில்நுட்பங்களின் உதவியுடன் வீடு கட்டும்போது வீட்டின் கட்டுமானச் செலவு பெருமளவில் குறைவதுடன் பசுமையான சூழல் கொண்ட கட்டிடத்தையும் உருவாக்க முடியும். வழக்கமான வீடுகளையே அதிகச் செலவில் கட்டுவதை விடுத்து செலவு குறையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த மாற்றுச் சிந்தனை அவசியம். அத்துடன் சிறிது துணிச்சலும் இருந்தால் விலை குறைவான ஆனால் உறுதியான சூழலுக்கு உகந்த வீட்டை எளிதில் கட்டி முடிக்கலாம்.
  

அஸ்திவாரம் எப்படி இருக்க வேண்டும்?

                            
   பெரு மழையும், வெள்ளமும் வந்த பிறகு பலரும் தங்கள் வீட்டின் அஸ்திவாரம் பற்றி கவலைகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அஸ்திவாரம் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற பதற்றம் எல்லோருக்கும் வந்துவிட்டது. ஆனால், முறையாக அஸ்திவாரம் போட்டால் வெள்ளமோ, நில நடுக்கமோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அஸ்திவாரம் போடும்போது கவனித்தக்க பல விஷயங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
>> முதலில் நாம் கட்டும் வீடு பல ஆண்டுகளுக்கு நிலைக்க வேண்டும் என்று நினைப்போம். அதற்கு வலுவான அஸ்திவாரம் அவசியம். மொத்த கட்டிடத்தையும் தாங்கி நிற்பது அஸ்திவாரம்தான். எனவே அஸ்திவாரம் வலுவானதாக மட்டுமல்ல, மிகவும் ஆழமாகவும் அமைக்கப்பட வேண்டும்.
>> எந்தப் பகுதியில் வீடு கட்டுகிறோமோ அந்தப் பகுதியின் மண்ணின் தன்மையைப் பற்றி ஆராய வேண்டும். ஒவ்வொரு மண்ணின் தன்மையும் ஒவ்வொரு விதமாகக் கட்டிடத்தைத் தாங்கும் தன்மை கொண்டவை. எனவே மண்ணின் தாங்கு திறனைப் பொறுத்தே கட்டிடத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மண்ணின் தாங்கு திறனில் குறைபாடு இருந்தால் கட்டிடத்தில் சிக்கல் வந்துவிடும்.
>> மண்ணின் தாங்கு திறனை உறுதிசெய்ய வேண்டும் என்றால் அதற்கு மண் பரிசோதனை மிகவும் அவசியம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தாங்கு தன்மையைக் கண்டறிய முடியும். அதற்கு ஏற்றார்போல வலுவான தாங்கும் தூண்களையும், அஸ்திவாரத்தையும் அமைக்க முடியும் என்பதால், மண் பரிசோதனையில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள்.
>> மழை, வெள்ளம், நிலநடுக்கம் என எந்த இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும், அதைத் தாங்கும் வகையில் அஸ்திவாரம் இருக்க வேண்டும். அதற்கு மண்ணின் தன்மையை ஆராய வேண்டும். கட்டுமானம் நடைபெறும் இடத்தில் உள்ள மண் எந்த வகையானது, அது அஸ்திவாரத்துக்கு உறுதுணையாக இருக்குமா என்பதையெல்லாம் உறுதி செய்ய வேண்டும்.
>> அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் வீடு கட்டுபவர்கள் கட்டாயம் மண் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தனி வீட்டைவிட அடுக்குமாடி குடியிருப்பில் அதிக வீடுகள் கட்டப்படும் என்பதால் மண்ணின் தாங்கும் திறன் எவ்வளவு, அடுக்குமாடி அமைந்துள்ள இடத்தின் மண் தன்மை எப்படி உள்ளது, அஸ்திவாரம் எவ்வளவு ஆழத்தில் போடப்பட்டுள்ளது என்பதில் கவனம் தேவை.
>> குறிப்பாக மண் எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப கட்டிடத்தின் உயரத்தை எழுப்ப வேண்டும். இஷ்டத்துக்கு எழுப்பினால் இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது சிக்கல் வந்துவிடும்.
>> மண் பரிசோதனை என்றால் மனையில் உள்ள மண்ணை எடுத்துக் கொடுப்பது அல்ல. மனையில் சில மீட்டருக்குத் துளையிட வேண்டும். ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் மனையின் பல இடங்களில் மண்ணை எடுத்துப் பரிசோதிப்பது மிக அவசியம்.
>> பல இடங்களில் மண்ணை எடுப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. மனையின் மேல் மட்டத்தில் ஒருவகை மண் இருக்கும். உள்ளே வேறு வகை மண் இருக்கலாம். தற்போது பல மனைகளும் பள்ளமான இடத்திலேயே உள்ளது. பள்ளமான மனையில் மண்ணை நிரப்பி மேடாக்குகிறார்கள். அந்த இடத்தை விற்பவர்கள் இதுபோன்ற மனையில் கூடுதல் கவனம் தேவை. வெவ்வேறு மண் கலந்திருப்பதால் அதன் மண்ணின் தாங்கு திறன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற மனையில் ஆழமாகப் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புவதே நல்லது.
>> சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் எல்லாமே ஏரிக்கு அருகேயோ, நீர் நிலைகளுக்கு அருகேயோ இருந்தவைதான். ஏற்கெனவே நீர் நிலை பகுதிகளாக இருந்திருந்தால் மண் பரிசோதனை செய்து மண்ணின் தாங்கு திறனை மதிப்பிட வேண்டும். இங்கே மிக ஆழமான அஸ்திவாரத்தை அமைத்தே வீடு கட்ட வேண்டும்.
>> இப்போது விளை நிலங்களில்கூட கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. விவசாய மண் எந்த ரகத்தை சேர்ந்தது என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். அங்கே கட்டிடம் கட்டும் அளவுக்கு மண்ணின் தன்மை உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆராய்ந்துவிட வேண்டும்.
>> விவசாய நிலங்களில் உள்ள மண் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையைச் சோதிக்கப் பார்க்க தவற வேண்டாம். ஒரு வேளை ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை இருந்தால் மழைக் காலங்களிலோ, வெள்ளக் காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழந்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற மண்ணில் தாங்கு திறனைவிட மிக வலுவான அஸ்திவாரம் அமைப்பதே நல்லது. ஏற்கெனவே வீடு கட்டி முடித்துவிட்டால் அஸ்திவாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
சிவில் மாணவர்கள் பாடப்புத்தகம் படித்தால் மட்டும் போதுமா?
பொறி.ஏ.பி.அருள்மாணிக்கம்
முன்னாள் முதல்வர், 
சென்னை பல்தொழிற் நுட்ப கல்லூரி


                                                      
பாடத்திட்டத்துடன் சிவில் பொறியியல் மாணவர்கள் கற்கவேண்டியவை
   நமது பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு பட்டப் படிப்பிற்கும் தனித்தனியே பாடத்திட்டங்கள் வகுக்கின்றன. அவ்வாறு பாடத்திட்டங்கள் நிர்ணயிக்கப்படும் போது, படிப்பை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களின் நுழைவு நிலைத் தகுதி, படிப்பின் கால அளவு, படிப்பின் நோக்கம் போன்றவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.ஆயினும், இப்பாடத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அனைத்து வகைப் பணிகளுக்கான தேவைகளையும் 100% பூர்த்தி செய்வதில்லை. அது இயலாத காரியமும் கூட.
   உதாரணமாக சிவில் இஞ்சினியரிங் துறையை எடுத்துக் கொள்வோமானால், அது ஒரு பரந்து விரிந்த ஆலமரம் போன்றது. ஆல மரத்திற்கு பல விழுதுகள் இருப்பது போல, சிவில் இஞ்சினியரிங் துறையானது பல்வேறு பிரிவுகளை உள் அடக்கியது. ஒவ்வொரு பிரிவும் தனித்தனி துறைகளாக (கட்டிடத் துறை, நீர்ப் பாசனத்துறை, போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை, மண் இயக்கத்துறை, கிராம அபிவிருத்தித் துறை, நகரமைப்புத்துறை போன்று) இயங்குபவை. ஆகவே சிவில் இஞ்சினியரிங் என்று பொதுவாக பட்டய அல்லது பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர், அனைத்து பிரிவுகள் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் முழுமையாய் கற்க முடியாது; குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அனைத்தையும் கற்பிக்கவும் இயலாது. ஆகவே பல பகுதிகள் பாடத்திட்டத்தில் அறிமுகம் (Introduction to.....) என்றே தரப்பட்டு, அடிப்படை விசயங்கள் மட்டுமே சேர்க்கப் படுகின்றன.
  ஆகவே, எந்தவொரு மாணவரும் (எத்துறையைச் சேர்ந்தவராயினும்) அவரது பட்டய/பட்டப் படிப்பிற்காக நிர்ணயம் செய்யப்பட்ட பாடப் பகுதிகளை மட்டும் படித்த விட்டு, பணித்தளத்தில் சிறிப்பாகப் பணிபுரிவது நிச்சய
மாக சாத்தியம் அல்ல. ஒரு பணியில் சேர்ந்த பின் அக்குறிப்பிட்ட பணிக்குத்தேவையான விசயங்களை தங்கள் அனுபவம் மூலமாகவும், புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள் மூலமாகவும், அத்துறையில் ஏற்கனவே பணியிலுள்ள மூத்த பொறியாளர்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
  ஆயினும், அவர்கள் மேற் கொள்ளும் பணிகளைத்தவிர பிற பணிகள் குறித்த விசயங்களை அப்பணித்தளத்தில் கற்க முடியாது. மாணவர்கள் தங்களுக்கு ஒரு வேலை கிடைக்க என்ன தேவையோ அவற்றை மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்று படிக்கக் கூடாது. அது போல வேலை கிடைத்தவுடன் அவ் வேலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்து கொள்வதோடு கற்பதை நிறுத்திக் கொள்ளவும் கூடாது. அப்படிப்பட்டவர்கள் அவர்கள் வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் காண்பது மற்றும் சாதனையாளராகத் திகழ்வது ஆகியவை இயலாத காரிய மாகும்.
   தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றால் போதும் என்ற நொக்கோடு அதற்கு தேவையான விசயங்களை மட்டும் தெரிவு செய்து படிக்கும் மாணவர்களும் உண்டு. இவர்கள் அப்பட்டப் படிப்பிற்காக நிர்ணயம் செய்யப் பட்டுள்ள அரைகுறை பாடத்திட்டத்திலிருந்து சுமார் 50% பகுதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து கற்கின்றனர். அதையும் தேர்வுகளை எழுதிய மறுநாளே வசதியாக மறந்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு பட்டம்தான் கிடைக்கும். சரியான வேலை கிடைக்காது.
   ஒருவர் சிவில் இஞ்சினியர் ஆகவேண்டும் என்று முடிவெடுத்த நாளிலிருந்து வாழ்வின் இறுதிநாள் வரை கற்றுக்கொண்டேயிருப்பதற்குப் போதிய விசயங்கள் இத்துறையில் நிரம்ப உள்ளன. ஆகவே, சிவில் இஞ்சினியரிங்
மாணவர் முடிந்தவரை தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கவேண்டும். படிப்பது என்றால் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள விசயங்களை வாசித்து தெரிந்து கொள்வது மட்டுமல்ல. அது போலவே, ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களைக் கேட்டு அஷீந்து கொள்வது மட்டும் கற்றல் ஆகாது. மாணவரின் வீட்டின் அருகின் அல்லது தங்கும் விடுதியின் அருகில் ஒரு பெரிய கட்டிடமோ, பாலமோ கட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். விடுமுறை நாட்களில் அங்கு சென்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளைப் பார்வையிடலாம்; பணியிலுள்ள பொறியாளரிடம் பணிகள் குஷீத்து விசாரித்து அறியலாம்.
   பேருந்தில் பயணம் செய்யும் போது, கண்ணில் படும் கட்டமைப்புகளைக் கூர்ந்து கவனித்தாலே விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இரயி லுக்காக காத்திருக்கும் நேரத்தில் நடைமேடையின் மேற்கூரை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு தாங்கப்பட்டுள்ளது, என்னென்ன உறுப்புகள் பயன் படுத்தப்பட்டுள்ளன, அவை எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன எனப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது, கட்டுமானப் பொருட்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் காட்சியகங்களுக்குச் சென்று பல விதமான பொருள்களின் பயன்பாடுகள், விலைகள் மற்றும் அப் பொருட்களின் சிறப்பம்சங்கள் குறித்து விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
   தற்கால கல்லூரி ஆசிரியர்களில் பெரும்பாலோர் எவ்வித பணித் தள அனுபவமும் இல்லாத புத்தகப்புலிகளாகவே உள்ளனர். ஆகவே பணித்தளங்களின் மேற்கொள்ளப்படும் சாரம் போடுதல், செங்கல் அடுக்கும் முறை, கிடை மட்டம் கொடுத்தல், சுவர் பூசும் முறைகள், கலவை மற்றும் காங்கிரீட் தயாரிக்கும் முறை, கதவுகள், ஜன்னல்கள், கிரில் கேட்டுகள், ஜாலிகள் ஆகியவற்றை சுவரில் பொறுத்தும் முறைகள், சென்ட்ரிங், பிளம்பிங், ஒயரிங் போன்ற பணிகளைப் பற்றி இந்த ஆசிரியர்களுக்கே எதுவும் தெரிவதில்லை.
ஆகவே, கட்டுமானப் பணித்தளங்களில் ஒரு பொறியாளர் மேற்கொள்ளவேண்டிய பணிகள் முழுமையாக கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதில்லை.
   இக்குறைகளைப் போக்க சிவில் இஞ்சினியருக்கான Time Saver’s Standards என்று பல புத்தகங்கள் உள்ளன. இவற்றில் இஞ்சினியர்களுக்கு தேவைப்படும் பல அறிய விசயங்கள் தரப்பட்டுள்ளன. கல்லூரிப் படிப்பின் போதே ஓய்வு நேரங்களில் இப்புத்தகங்களை நூலகங்களிலோ இணைய தளங்களிலோ பெற்று படித்து தேவையான விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். கட்டடத்துறைச் சார்ந்த தமிழ் நூல்கள், பத்திரிகைகளைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் கல்லூரிப் படிப்பை முடித்து பணித்தளங்களில் பணியேற்பதற்கு முன், அப்பணித்தளங்களில் அவர்கள் மேற்பார்வையிட அல்லது அறிவுரை கூறவேண்டிய வேலைகள் குறித்து அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
   தங்கள் கருத்துக்களை அதிகாரிகளிடமும், பணியாளர்களிடமும் உரிய முறையில் எடுத்துக் கூறத் தேவையான திறமையையும் (Communication Skill ) வளர்த்துக் கொள்ள வேண்டும்.Autocad போன்ற பலவித மென்பொருட்களில் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. கல்லூரிப் படிப்பின் போது ஒவ்வொரு பருவத்திற்கும் இடையில் சுமார் ஒரு மாதம் விடுமுறை விடப்படும் காலத்தில் பணித்தளங்களில் தாங்களாகச் சென்று செய்முறைப் பயிற்சி பெறுவது நல்லது.
- பொறி.ஏ.பி.அருள்மாணிக்கம்
சைட் சூபர்வசர்கள்
களப்பணியிலும், சரக்கிருப்பிலும் தூள் கிளப்புவது எப்படி?




    சிவில் சூபர்வைசர் தாம் ஈடுபட்டுள்ள கட்டடப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் தரமுள்ளவையாக இருக்கும் விதத்தில் தேர்வு செய்வதில் திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
குறித்து வைக்க மறக்காதீர்கள் :
சிவில் சூபர்வைசர் ஒருவர் தனக்கு நேரும் ஒவ்வொரு அனுபவத்தையும் குறிப்பாக எழுதி வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கலாம். சில நேரம் வீடு கட்டுவீர்கள். வேறு சில நேரங்களில் கல்வி நிலையங்கள் கட்டிக் கொண்டிருப்பீர்கள். பிற நேரங்களில் தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பீர்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வேறுபடக் கூடியவை. ஆனால் இவற்றிற்கான உங்களுடைய குறிப்புகள் ஒரே விதத்தில் அமையலாம்.
   இன்றைக்கு நானூறு மூடை சிமென்ட் வந்து இறங்கியது என்பது ஒரு சிறு குறிப்பு. இதையே நீங்கள் இன்னும் விரிவாக எழுதி வைக்கலாம்.
தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்
சிமென்டின் தரம் ( கிரேட்)
உற்பத்தி இடம்
விநியோகிப்பாளரின் கிடங்கு
இடையிலுள்ள தூரம்
வந்து சேர்வதற்கான நேரம்
போக்குவரத்து, ஏற்று , இறக்குக் கூலி
அதற்குத் தேவைப்பட்ட நேரம்
ஆட்களின் எண்ணிக்கை
இருப்பு வைக்கப்படும் இடம்
அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்
என்றைக்கு எத்தனை மூடைகள் வெளியில் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான திட்டம்
இருப்பிற்குப் பொறுப்பேற்பவர்
கிடங்கிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவு
சான்றுச் சீட்டு
வெளியில் அனுப்பி வைக்கப்பட்ட மூடைகளின் எண்ணிக்கை
பயன்படுத்தப்பட்ட அளவு
வேலை இடத்தில் மீதம் நிற்பது
(அல்லது) பயன்படுத்தியது போக மீதி திரும்பி வந்தது
எந்த நேரத்திலுமான இருப்பின் விவரம்
அடுத்து எப்போது தேவைப்படும்?
குறைந்தபட்ச இருப்பு
அடுத்த நடை வந்து சேர்வதற்கான இடைவெளி
    இவற்றை முறையாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டால் எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளாமல் உங்கள் இயக்கங்கள் மேம்படும்.
    நீங்கள் சிவில் சூபர்வைசர் என்ற விதத்தில் எத்தனையோ பேர்களுடன் உரையாட வேண்டி இருக்கும். விற்பனையாளர்கள். உற்பத்தியாளர்கள். விநியோகிப்பாளர்கள். ஆய்வாளர்கள். ஒப்பந்தக்காரர்கள். துணை ஒப்பந்தக்காரர்கள். உரிமையாளர்கள். பொறியாளர்கள். வல்லுநர்கள். தொழிலாளர்கள்.
    இப்போது ஒரு கடைக்காரரிடம் பேசிவிட்டு வந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் குறிப்புகளை எழுத ஆரம்பியுங்கள்.
சந்தித்த நபர்
எந்த வகையைச் சேர்ந்தவர்
நாள்
நேரம்
இடம்
நிறுவனம்
சந்திப்பிற்கான தேவை
சந்திப்பின் பலன் / விளைவு
குறைந்தபட்சம் இந்த விவரங்களையாவது உங்கள் குறிப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதெல்லாம் எதற்கு? எல்லாம் என் ஞாபகத்திலேயே இருக்கும் என்று சொல்லாதீர்கள்.
குறைகளையும் பதியுங்கள்
நீங்கள் உங்களது குறிப்புகளில் நல்ல விஷயங்களை மட்டுமேதான் பதிவு செய்து வைக்கவேண்டும் என்பது இல்லை. கெட்ட விஷயங்களும் இருக்கலாம். கெட்டவை என்றால்
எப்படி ?
    நீங்கள் ஒரு ஒப்பந்தக்காரரைக் காச்சு மூச்சென்று கத்தித் திட்டி இருக்கலாம். அதற்குக் காரணம்? அவர் மூன்று நாட்களில் முடித்திருக்க வேண்டிய வேலையை நான்கு நாட்களுக்கு இழுத்திருப்பார்.வினியோகிப்பாளர் ஒருவர் அனுப்பி வைத்த வேதிப் பொருட்கள் நீங்கள் கேட்டுக் கொண்ட நிறுவனத் தயாரிப்பாக இல்லாமல் இருந்திருக்கலாம்.
    கட்டடத் தேவைக்கான சரக்குகள் வந்து இறங்குகின்றன.
அனுப்பி வைக்கப்பட்ட அதே அளவு, எண்ணிக்கையில் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறதா? சரி பாருங்கள். பதிவு செய்யுங்கள்.
திட்டங்கள், வரைபடங்கள், அனுமதிகள், ஆய்வுகள் போன்றவற்றையும் அது அதற்கு உரிய ஒழுங்கில் பராமரியுங்கள். இந்த ஒழுங்கில் மாற்றம் இருந்தால் அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
    காசை விடக் கணக்கு முக்கியம். ஒரு சிவில் சூபர்வைசர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக் கூடிய விக்ஷஷயங்கள் பல இருக்கும். எந்த நேரத்தில் எதை வாங்கினோம்,எதை யாருக்குக் கொடுத்தோம் என்பது மாதிரியான விவரங்கள் அடங்கிய குறிப்புச் சீட்டுக்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை டெலிவரி ஸ்லிப்கள், சலான்கள், ரிசிப்ட்கள் என்று குறிப்பிடுவார்கள்.சே.. என்ன ஒரு தலைவலி இது? எத்தனையைத்தான் பத்திரப்படுத்தி வைப்பது என்று எரிச்சலடையாதீர்கள். சின்னதாய் ஒரே ஒரு துண்டுச் சீட்டைத் தொலைத்துவிட்டாலும் அவதிப்படப் போவதென்னவோ
நீங்கள்தான்.
கண்காணிப்பு அறிக்கைகள்
    செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் எந்த அளவுக்குச் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கும். இன்று மாலை வரை இன்னின்ன வேலைகள் இந்த அளவு முடிந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கணக்கு வைத்திருப்பீர்கள். நீங்கள் திட்டமிட்டபடி வேலைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா? பார்க்க வேண்டும். இந்த விவரங்களைப் பார்த்தவுடன் எளிதில் புரிந்து கொள்கிற மாதிரி வரைபடங்களாகவும் வைத்துக்கொண்டால் மிகவும் நல்லது. இதிலும் கம்ப்யூட்டர் பதிவுகளாக இருந்தால் மேலும் எளிது.
கள அலுவலகம்
    நீங்கள் வேலை செய்யும் இடத்திலேயே உங்களுக்கென்று ஒர் அலுவலகத்தை அமைத்துக் கொள்ள முடிந்தால் பேருதவியாக இருக்கும். பெரிய இடப்பரப்புத் தேவையில்லை. ஒரு நூறு சதுர அடிக்குள் இருந்தாலே போதும்.உங்களது ஆவணங்கள் , கோப்புகள் முதலியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக் கூடிய வசதிகள் இருக்க வேண்டும். அவற்றை வெயில், மழை , பூச்சிகள்,திருடர்கள் போன்ற தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் பத்திரமானதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
   நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகள் நூற்றுக் கணக்கிலானவை. ஒவ்வொன்றையும் வரிசைப்படி ஒவ்வொன்றாகச் செய்வதா?ஒரே நேரத்தில் பல வேலைகளை மேற்கொள்வதா? தீர்மானிக்க வேண்டும். 1,2,3 என்கிற வரிசைப்படிதான் போக வேண்டும் என்பது மாதிரியான வேலைகள் சில இருக்கலாம். 17,4.36 என்று வசதிப்பட்ட வரிசையில் முடிக்கக் கூடிய வேலைகளும் இருக்கலாம்.
முன்பெல்லாம் சுவரை வைத்துவிட்டு அதன்மேல் தளத்தை உட்கார வைப்பார்கள். இப்போது? தளத்தை உருவாக்கிவிட்டுச் சுவர்களை எழுப்பி அடைக்கிறார்கள். வரிசை முறை மாறுகிறது. வசதிகள் பெருகுகிறது.நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டுமானால் எந்த வரிசையில் போனாலும் பாதிப்பில்லை என்பது மாதிரியான ஒரு வரிசை முறையைப் பின்பற்ற வேண்டும். இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
    ஜல்லியையும் மணலையும் சிமென்டையும் தண்ணீரையும் தயாராக வைத்துக் கொண்டுதான் தளம் போடும் வேலையைத் துவக்க வேண்டும். முதலில் நீராற்றும் வேலையைத் தொடங்குகிறேன். அப்புறமாய்த் தளம் போடுகிறேன் என்று போக முடியுமா?இயந்திரங்கள் வந்து காத்துக் கிடக்கும். பொருட்கள் வந்து சேர்ந்திருக்காது. இரண்டும் தயாராக இருக்கும். ஆட்கள் வந்திருக்க மாட்டார்கள்.இப்படி ஓரிடத்தில் நடக்கும்.
   இன்னொரு இடத்தில்? இதுவே தலைகீழாக இருக்கும்.முதலில் ஆட்கள் வந்துவிடுவார்கள். அவர்கள் வேலையை ஆரம்பிப்பதற்கு ஒன்றும் இருக்காது. தாதமாக இயந்திரங்கள் வந்து சேரும். கட்டுமானப் பொருட்கள் இன்னும் கிடங்கை விட்டே கிளம்பி இருக்க மாட்டா.காத்திருப்பு.
   தேவையில்லாத காத்திருப்பு.ஆட்கள் என்றால் அவர்களைச் சும்மா உட்கார்த்தி வைத்துக் கொண்டு கூலி கொடுத்தாக வேண்டும். இயந்திரங்கள் என்றால் பயன்படுத்தாமலேயே வாடகை கொடுக்க நேரும். ஏன் இப்படி?ஒருங்கிணைப்பு சரி
யில்லாததுதான் காரணம் . அதற்கு யாரைக் குறை சொல்வார்கள்? வேறு யாரை? உங்களைத்தான் . சிவில் சூபர்வைசராகிய உங்களுக்குத்தான் எல்லாப் பக்கங்களில் இருந்தும் இடி கிடைக்கும். சமாளிக்க வேண்டும்.
பொருட்களைக் கையாளும் விதம்
     கட்டுமான வேலைகளுக்கான பொருட்கள் வந்து கொண்டே இருக்கும். மறுபக்கம் நீங்கள் அவற்றைக் கட்டட வேலைகளுக்காக எடுத்துக் கொடுக்க வேண்டி வரும். எவ்வளவு வருகிறது , எவ்வளவு போகிறது என்பதை எல்லாம் நீங்கள்தான் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இருப்பைச் சரிகட்ட வேண்டும்.கட்டுமானத்திற்கானாலும் வேறு எந்தத் தேவைக்கானாலும் கிடங்கிற்கு வந்து சேரும் பொருட்களை எப்போது வெளியில் எடுப்பது என்பதற்குச் சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றித்தான் வைப்பதும் எடுப்பதும் நடக்க வேண்டும்.
முதலில் வருவது முதலில் வெளியில்
முதலில் வருவது இறுதியில் வெளியில்
இறுதியில் வருவது முதலில்
இறுதியில் வருவது இறுதியில்
இந்த நான்கு வழிகளில் நீங்கள் கட்டுமானத்திற்குத் தேவைப்படும் பொருட்களைக் கையாள வேண்டும்.
இவற்றை முறையே
FIRST IN FIRST OUT (FIFO)
FIRST IN LAST OUT(FILO)
LAST IN FIRST OUT(LIFO)
LAST IN LAST OUT(LILO)
என்று குறிப்பிடுவார்கள். பொருட்களின் தன்மை, ஆயுட்காலம். இருப்பு வைக்கும் நிலை, பயன்படுத்துதலுக்கான தேவை ஆகியவற்றைப் பொருத்து நீங்கள் எந்த வகையைப் பின்பற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
     ஒவ்வொரு முறையிலும் சாதக, பாதக அம்சங்கள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் உங்கள்தொழிலுக்கேற்ற வழிமுறையைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்ற வேண்டும். எதை இருப்பு வைக்கலாம், எதை உடனடியாக வெளியில் அனுப்பலாம் என்பது உங்கள் முடிவின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய வேலையாகும்.இருப்பு எப்போது தீரும், மறுபடியும் எப்போது கொள்முதல் செய்து இருப்பு வைக்க வேண்டும் என்பதும் இதைப் பொருத்தே அமையும். சில நேரங்களில் கட்டாயமாக இருப்பு வைத்தே ஆகவேண்டிய தேவை ஏற்படும்.
     சில நேரங்களில் இருப்பில் இருப்பதை முதலில் தீர்த்துவிட்டுப் பிறகு வாங்க வேண்டி வரலாம்.வாங்குகிற பொருட்களை இருப்பு வைக்க வேண்டியது முக்கியத் தேவை. அவ்வாறு இருப்பு வைக்கப் பாதுகாப்பான கிடங்கு வசதி வேண்டும். இருப்பு வைத்துப் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக இருக்க வேண்டும்.இருப்பில் இருக்கும்போது கெட்டுவிடக் கூடாது. நீண்ட காலம் வைத்திருந்தாலும் பயன்படுத்த ஏற்ற நிலையில் இருக்கும் பொருட்களைத்தான் இருப்பு வைக்க வேண்டும். சிமென்டை வாங்கி மாதக் கணக்கில் வைத்திருக்க முடியாது.
கூடவும் கூடாது.
     கம்பி என்றால் எத்தனை மாதங்கள் என்றாலும் வைத்திருக்கலாம். தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.சிமென்டுக்கும் அதே கவனம் தேவைப்படும். ஆனால் நேரடியாகத் தண்ணீர் படாவிட்டாலும் காற்றின் ஈரப்பதமே பாதிப்பை ஏற்படுத்தலாம்.அடுக்கி வைப்பதால் ஏற்படும் இறுக்கம் சிமென்டைக் கட்டிதட்டிப்போக வைக்கலாம். சில தயாரிப்புப் பொருட்களை இருப்பு வைக்கும் காலம் அதிகமாக இருக்கும்படி வைத்திருந்தால் அவற்றிற்கான உத்தரவாதம் காலாவதியாகிவிடலாம்.இப்படிப்பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
சைட் சூபர்வைசருக்கு என்ன தகுதிகள் வேண்டும்?
__________________________________________________



       எந்த வகையான கட்டுமானப் பணிகளுக்கு சிவில் சூபர்வைசர் தேவைப்படுகிறார் என்பதை வைத்து அவரது கல்வித் தகுதி எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.
         சின்னச் சின்ன வேலைகளை மேற்பார்வையிடுவதற்கு அனுபவ அறிவே போதுமானது.சில இடங்களில் நடந்த கட்டுமான வேலைகளுக்கு மேஸ்திரியைக் காட்டிலும் சற்றே உயர்நிலையில் படித்தவர்கள் போதுமானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக ஐ.டி.ஐ தரத்திலான படிப்புப் படித்தவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.அடுத்த கட்டத்தில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ) படித்தவர்கள் பொருந்துவார்கள்.
        அதற்கும் மேலான தகுதி என்றால் பொறியியல் பட்டதாரிகள் விரும்பப்படுவார்கள். பொறியியலில் பட்டம் பெற்றதோடு மட்டும் நின்றுவிடாமல் அதற்கு மேலும் பட்ட மேற்படிப்பு, நிர்வாக இயல், நிதி இயல் என்றெல்லாம் படித்தவர்களும் இந்தப் பணிகளில் ஈடுபட முன்வருகிறார்கள்.
        கூடவே கம்ப்யூட்டர் அடிப்படையிலான கல்வித் தகுதியும் விரும்பப்படுவதாக இருக்கிறது . இப்போதெல்லாம் கம்ப்யூட்டரை வைத்துக் கணக்குப் போடத் தெரியாதவர்கள் கைநாட்டுக்களைப் போலவே மதிக்கப்படுகிறார்கள். பொறியியல் என்று வரும்போது கம்ப்யூட்டரிலேயே கட்டட வரைபடத்தையும் கணக்குகளையும் போடத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைதானே?

கூடுதல் தகுதிகள் :
       சிவில் சூபர்வைசர் வேலைக்குச் சட்டம் படித்திருப்பதும் கை கொடுக்கும். தொழிலாளர் நலச் சட்டங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது நல்லது. தொழில் தகராறுகள் வராமல் வேலைகளை நடத்திச் செல்வதற்கு இது அவசியமான தேவையாகும்.ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும்.
        அவற்றைப்பின்பற்றித்தான் இயங்க வேண்டி வரும். தொழிலாளர்களை எவ்வளவு நேரம் வேலை வாங்கலாம், அதிகப்படி வேலைக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டுமா என்பதை எல்லாம் சிவில் சூபர்வைசர் அறிந்து வைத்திருக்க வேண்டும்.பணிகளின் போது விபத்து ஏதும் ஏற்பட்டுவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். படித்தும் தெரிந்து கொள்ளலாம். அனுபவத்திலும் நிறையக் கற்றுக் கொள்ளலாம்.விபத்து நேர்ந்துவிட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும். காப்பீட்டுத் தொகையைப் பெற வேண்டும். இதற்கான நடைமுறைகள் எல்லாம் சிவில் சூபர்வைசருக்கு அத்துபடியாகி இருக்க வேண்டும்.
      அரசு, தனியார், கூட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து வேலைகளைப் பெற வேண்டும். முடித்துக் கொடுக்க வேண்டும். இதற்குரிய திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
      சிவில் சூபர்வைசர் என்பதுதான் ஆரம்ப நிலை. அதிலேயே இருந்து விடலாம் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். மேலும் மேலும் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள் அதற்கேற்பத் தங்களது கல்வித் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிவில் சூபர்வைசர்,
சிவில் மேனேஜர்,
ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்,
ஸ்டோர்ஸ் மேனேஜர்,
ஸ்டோர் கீப்பர்,
பர்ச்சேஸ் அசிஸ்டென்ட்,
பர்ச்சேஸ் இன்சார்ஜ்,
மெட்டீரியல்ஸ் மேனேஜர்,
காண்ட்ராக்டர்,
லையசன் ஆபிசர் போன்ற பல நிலைகளை எட்டலாம். இதே வரிசைப்படிதான் முன்னேற வேண்டும் என்பதும் இல்லை.படித்த படிப்பை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு மாதச் சம்பளம் பெறும் வேலையைப் பிடிப்போம் என்று நினைப்பவர்கள் தங்களது கல்வித் தகுதியை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள்.சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்கள் தங்களது படிப்பையும் அனுபவத்தையும் மேலும் திறமையாகப் பயன்படுத்தும் விதத்தில் முன்னேறத் திட்டமிடுவார்கள்.
     அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் தங்களது உயர்விற்கு வானமே எல்லை என்று இயங்கலாம். சாதாரண நிலையில் ஆரம்பித்துப் பல படிகளைக் கடக்கலாம்.
தொழிற்கல்விப் படிப்பு,
மேல் நிலைப் பள்ளிப் படிப்பு,
பட்டயப் படிப்பு,
பட்டப் படிப்பு,
தொழில் பழகுநர் பயிற்சி,
குறுகிய காலப் படிப்பு, பயிற்சிகள்,
நிறுவனங்களில் பணியாற்றும் அனுபவம்,
சொந்தத் தொழில் அனுபவம்,
வெளிநாடுகளில் சென்று பணியாற்றிய அனுபவம்,
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம்,
என்று பல்வேறு தகுதிகளைப் பெற்றால் ஒவ்வொரு படிநிலையையும் எளிதாகக் கடந்து செல்லலாம்.
         பகுதிநேரப் படிப்பிற்குப் பல வசதிகள் கிடைக்கின்றன. ஆன்லைன் பயிற்சிகளிலும் சேரலாம். அஞ்சல் வழியிலும் பயிலலாம்.சில நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்களை அயல் நிறுவனங்களில் பயிற்சி எடுக்க வைப்பதும் உண்டு. எந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் முன்னுக்கு வரலாம்.

சிவில் துறையில் சிறந்து விளங்க...
-------------------------------------------------------
மாணவர்கள் மட்டுமல்ல , கல்லூரிகளும் கவனிக்க வேண்டும்
----------------------------------------------------------------------------------------------


    நீங்கள் சிவில் பயிலும் மாணவரா? வகுப்பிலேயே நீங்கள் தான் ஃபர்ஸ்டா? அப்படியானால் கட்டுரைக்குள் வாருங்கள்.வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் சரி. களத்தில் உங்களுக்கு கிடைக்கப் போகும் மதிப்பெண்கள் எத்தனை தெரியுமா? இதென்ன பிரமாதம்? நாங்கள் தான் பிராக்டிகல் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறோமே என நீங்கள் சொல்லலாம்.ஆனால், நிஜமாக நீங்கள் மேற்கொள்ளப் போகும் கட்டுமான புராஜெக்டுகளுக்கும்,வகுப்பில் நீங்கள் மேற்கொண்ட செய்முறைப் பயிற்சிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.இதனால்தான் நிறைய மாணவர்களால் பிரகாசிக்க முடியவில்லை.
     சரி.என்னென்ன அடிப்படையான நுட்பங்களை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?அதற்கான வழி என்ன?முதலில்,மாணவர்கள் சைட்டுக்குச் சென்று, கட்டிடங்கள் கட்டுவது எப்படி என்று தங்கள் சொந்த முயற்சியில் தெரிந்து கொள்ள வேண்டும். செமஸ்டர் விடுமுறையில் ஏதோ ஒரு கட்டிடத்திற்குச் சென்று அங்கே நடக்கும் வேலைகளை தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
பாடமுறைகளுக்கும், ஃபீல்டு ஒர்க்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல் மற்றும் மணல் குவாரிகள் இருக்கும் இடங்கள், கட்டிடங்களில் பயன்படும் பொருட்களின் தற்போதைய விலைப் பட்டியல், பலதரப்பட்ட தொழில்களின் ஊதியம் போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
    நம்நாடு அல்லாமல் மற்ற நாடுகளில் உள்ள புதிய தொழில் நுட்பங்களைப் பற்றி தெரிந்து கொண்டு நம்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்.கட்டிடங்கள் விழாமல் தடுக்க பல விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
    இயற்கை பேரழிவான சுனாமி மற்றும் பூகம்பம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டிடங்களை வடிவமைக்க தெரிந்திருக்க வேண்டும். Soft Computing டெக்னிக்கை பயன்படுத்தி கட்டிடங்கள் வடிவமைப்பை தெரிந்திருக்க வேண்டும். அதனால் கட்டிடங்களில் பொருட்களின் உபயோகங்கள் குறைவதுடன் நேரம் மற்றும் வேலையாட்களின் தேவை குறையும்.
    மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் நேரத்தில் அளவு
மற்றும் முறையை (Auto CAD, ARICI CAD) கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் கல்லூரி படிப்பை முடித்து சைட் ஒர்க்குக்கு செல்லும் போது இது மிகமிக அவசியமாகிறது. மாணவர்கள் படிக்கும் காலத்தில் எந்த மாதிரியான வேலை (அல்லது) மேற்கல்வி படிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
   மாணவர்கள் படிக்கும் பாடங்களுடன் கட்டிடங்கள் கட்டும் விதிமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    மாணவர்கள் படிக்கும் காலங்களில் டிசைன் சாஃப்ட்வேர் மற்றும் வரைபடம் வரைவதற்கு போன்றவற்றை தெரிந்து கொண்டு இருந்தால் தனியார் துறையிலும் அரசு துறையிலும் முன்னுரிமை தரப்படுகிறது. நூலகத்திற்குச் சென்று தினசரி நாளிதழ்கள், கட்டுமானத்துறை நாளிதழ்களை படித்து நவீன தொழிற்நுட்பங்களை தெரிந்து கொள்ள ேண்டும்.கட்டுமானத்துறை பத்திரிகைகளை தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும்.
இணையதளத்தில் சிவில் சம்பந்தமான தளத்திற்கு சென்று புதிய புராஜெக்டுகளை பற்றியும், வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்அவர்கள் சொந்த முயற்சியில் சிறிய புராஜெக்டுகளை ஒரு செமஸ்டருக்கு ஒன்று வீதம் செய்ய வேண்டும்.
   சிவில் துறையில் முன்னோடியாக திகழும் வல்லுனர்களை பற்றியும் அவர்களது நடைமுறை அனுபவத்தை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.அரசு துறை தேர்வு TNPSC, CPWD, Railway Service Commission, Rites, Highways, UPSC, Staff selection Commission, IAS, IES, IRSஆகிய தேர்வுகளுக்கு அல்லது Gate Examination ஆகியவைகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
   ஆக மொத்தத்தில், மாணவர்கள் சிவில் துறையில் சேர்ந்த நாள் முதல் தங்களை சிவில் இன்ஜினியர்களாக பாவித்துக் கொண்டு அதற்கேற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல சிவில் இன்ஜினியராக தங்களை உருவகப்படுத்தி கனவு காண வேண்டும்.
   மாணவர்கள் சிறந்து விளங்க கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களும் நிறைய உள்ளன.
கல்லூரி நிறுவனங்கள் அருகாமையில் உள்ள கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து புராஜெக்டு ஒர்க், மெட்டீரியல் டெஸ்டிங், ஃபீல்டு விசிட் ஏற்பாடு செய்ய வேண்டும்.
    கல்லூரிகளை தொழிற்சாலைகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுடன் MOU Signசெய்து தொழிற்சாலைகளுக்கு ஏற்ற மாதிரியான பொறியியல் வல்லுனர்கள் தேவை என அறிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
   சிவில் துறையில் முன்னோடியாக திகழும் சிறந்த வல்லுனர்களை கல்லூரிக்கு அழைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
கல்லூரிகளில் Preparation of Estimates, Project Formulation, Investigation & Design execution of works, Testing & Consulting work செய்வதன் மூலம் அரசுத்துறை (National Highways, Highways & Rural Works Board ) உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு செயல்முறை விளக்கங்கள் புரிந்து கொள்ள வைக்க வேண்டும்.
   ஆராய்ச்சித் துறைகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி, அதில்மாணவர்கலையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மேலும்,நவீன தொழிற்நுட்பங்களை தெரிந்து கொள்ள கூடுதலாக பொறியியல் ஆராய்ச்சி மையங்களை அமைக்க வேண்டும்.
   கல்லூரி நூலகத்தில் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களை (கட்டுமானப் பொறியியல் தொடர்பானவை) வைத்து மாணவர்கள் அதனை பயன்படுத்தி அறிவை புதுப்பிக்க வேண்டும்.
   Manson Training Programme , கருத்தரங்கம் ஆகியவை நடத்துவதன் மூலம் மாணவர்கள் அதில் பங்கு பெற்று பயன்பெறுவார்கள்.
அதுமட்டுமல்ல Consultant, Contractor, Field workers ஆகியோருடைய தொடர்புகளை வைத்துக் கொண்டு இன்னும் கட்டுமானத்துறையில் என்ன சாதிக்க முடியும் என்பதை பற்றியும் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
    மாணவர்கள் மூன்றாவது, நான்காவது ஆண்டு படிக்கும் போது பிற்காலத்தில் வேலைக்கு செல்வதற்கான அவர்களுடைய விருப்பங்களை தெரிந்து கொண்டு (Teachers, IAS, UPSE, Staff Commission, Gate Examinatio) அதற்கு தகுந்தபடி கோச்சிங் கொடுக்க வேண்டும். மாணவர்கள் கிரியேட்டிவிட்டியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை புதுவிதமான புராஜெக்டுகளை செயற்படுத்த ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பொறுப்பு ஏற்று நல்ல புராஜெக்டுகளை பேட்டண்ட் செய்தவற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
    Material Testing Centre, Consultancy, Coaching Centre, Research Centre ஆகியவற்றை அமைத்துக் கொடுத்து அனைத்துக்கும் தரமான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்சிவில் மாணவர்களின் வெற்றி என்பது கல்லூரியிலேயே முதலிடம் பெறுவது மட்டுமல்ல என்பதை கல்லூரி நிர்வாகிகளும் சிவில் மாணவர்களும் உணர்ந்திருக்க வேண்டும்
    

சூப்பர் பில்டப் ஏரியா என்றால் என்ன?

                                           (Super Buildup Area)

                                                 


      வீட்டுமனை வாங்கும்போது அதன் பரப்பளவு நமக்குத் தெளிவாகத் தெரியும். பத்திரப் பதிவுக்குப் பிறகு பட்டா பெறும்போது பரப்பளவு உறுதியாகவும் தெரியும். கட்டி முடிக்கப்பட்ட தனி வீடுகளை வாங்கினாலும் அப்படித்தான். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கும்போது வீட்டின் பரப்பளவை எப்படித் தெரிந்துகொள்வது?
அடுக்குமாடிக் குடியிருப்பு களுக்கான விளம்பரங்களில் தவறாமல் சதுர அடி கணக்கு இடம்பெற்றிருக்கும். அந்தச் சதுர அடி கணக்கு, சுவர்களுக்கு இடையே உள்ள பரப்பளவைக் குறிக்கிறதா? இல்லை சுவர்கள் அமைந்திருக்கும் இடத்தையும் சேர்த்துக் குறிக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம்.

கார்பெட் ஏரியா (Carpet Area)
  நான்கு சுவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும் பரப்பளவுக்கு கார்பெட் ஏரியா என்று பெயர். நம் நாட்டில் எல்லா வீடுகளிலும் கார்பெட் பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் எல்லா அறைகளிலும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் சுவர்களைத் தவிர்த்து பரப்பளவைக் கணக்கிடுவதால் கார்பெட் ஏரியா என்றே அழைக்கிறோம்.

பிளின்த் ஏரியா (Plinth Area)
  வீட்டின் பரப்பளவைக் கணக்கிடும்போது சுவர்கள் இருக்கும் இடத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் அது பிளின்த் ஏரியா ஆகும். பிளின்த் ஏரியாவைக் காட்டிலும் கார்பெட் ஏரியாவின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாக வித்தியாசப்படும் இன்னொரு ஏரியாவும் இருக்கிறது. அதற்கு சூப்பர் பில்டப் ஏரியா என்று பெயர்.

சூப்பர் பில்டப் ஏரியா (Super Buildup Area)
  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் மட்டுமா இருக்கின்றன? விளையாட்டுத் திடல், பூங்கா, நீச்சல் குளம், நடைபாதை, வாகனங்கள் நிறுத்துமிடம் என்று ஏகப்பட்ட இணைப்புகளையும் சேர்த்துப் பெறுகிறோம் இல்லையா? அவை இலவச இணைப்புகள் அல்ல. இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களின் அளவையெல்லாம் கூட்டி அங்கு இருக்கும் மொத்த வீடுகளின் எண்ணிக்கையால் வகுத்து அதை ஒவ்வொரு வீட்டின் அளவோடும் சேர்த்துக் கணக்கிடுவார்கள்.
இந்த சூப்பர் பில்டப் ஏரியாவானது, கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாகவே வித்தியாசப்படும். ஆனால் இந்தப் பரப்பு அவ்வாறு குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். நடைபாதைக்கான இடம் என்று சொல்லிவிட்டு அங்குக் கடைகளைக் கட்டுகிறார்கள் என்றால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
வீட்டை வாங்கும்போது கூடுதல் பரப்பளவு சொன்னார்கள், ஆனால் கொடுத்தபோது மிகவும் குறைவாக இருக்கிறது என்று பின்னால் வருத்தப்படக் கூடாது. வீட்டின் பரப்பளவு பற்றிய விவரத்தை முதலில் கேட்கும்போதே கார்பெட் ஏரியா, பிளின்த் ஏரியா, சூப்பர் பில்டப் ஏரியா என்று ஒவ்வொன்றின் அளவையும் தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதே மிகச் சிறந்தது.

Friday 8 April 2016

Plinth Area Sqft Rate என்ன?




வீடு கட்டனும் நினைச்சவுடனே சதுர அடிக்கு என்ன Rate ?
        இது தான் , எல்லா வீடு கட்டும் நபர்களும் கேட்கும் ஒரே கேள்வி.
முதலில் சில அத்தியாவசிய விஷங்களை ஆராய்வோம்..
கட்டிடத்தின் (Plinth Area) சதுர அடியை அளப்பது எப்படி?
கட்டிடத்தின் வெளிப்புற நீளம் மற்றும் அகலம் கொண்டு பரப்பு கணக்கிடப்படும், வாகன நிறுத்தம் மற்றும் வெளிப்புற மாடிப்படி பரப்பில் பாதி... இதுதான் Plinth Area
குறிப்பு : ஜன்னல் Sunshade, Balcony,அகலம் இரண்டு அடிக்கும் குறைவாக இருந்தால் பரப்பை கணக்கிடக் கூடாது.
சதுர அடியின் விலையை எப்படி மதிப்பிட வேண்டும்?
     ஒரு கட்டிடத்தின் மொத்தக்கட்டுமான செலவிற்கும் அதன் (Plinth Area) சதுர அடிக்கும் உள்ள விகிதம். 
குறிப்பு : இதன் மதிப்பு ஒரே மாதிரியான Specification இருக்க வேண்டும்.
Plinth Area Sqft Rate முறை கட்டிட ஒப்பந்தத்திற்க்கு சரியானதா?
      இல்லை! இந்த Plinth Area Sqft Rate, ஒரு தோரய மதிப்பீடு தானே தவிர, மிகச் சரியான மதிப்பிடு அல்ல, இது கட்டிடம் கட்டும் முன், வரைபடம் தயாரிக்கும் முன் சொல்லப்படும் தோரய மதிப்பீடு மட்டுமே.
ஒப்பந்தகாரர்கள் Plinth Area Sqft Rate - ல் வேலை செய்கிறார்களே அது எப்படி?
சில ஒப்பந்தகாரர்கள் முதலில் அவரது வேலையின் Specification கொடுப்பது இல்லை. அப்படியே கொடுத்தால் அவர்களது பரப்பளவு கணக்கிடும் முறையில் மற்றம் இருக்கும். அது கட்டிட வரைபடம் முடியும் முன் அல்லது பின் சதுர அடியின் விலை (Sqft Rate ) மட்டுமே பேசப்படும். மொத்ததொகை சொல்லபடாது.

    விலை மற்றும் பரப்பு கணக்கிடும் முறை முதலில் தெரிவிக்கப் பட்டிருந்தால், Finishing வேலை வரும் பொழுது Tiles, Wood போன்றவை கட்டிட உரிமையாளர் பொறுப்பு என்றும், வாங்கிக் கொடுத்தால் நாங்கள் பொருத்தி கொடுப்போம் என்றும் சொல்வார்கள்.

     விலை, மற்றும் பரப்பை கணக்கிடும் முறை முதலில் தெரிவிக்கப்படா விட்டால் பொருட்களின் பொறுப்பு ஒப்பந்ததாரர் எனினும், பொருட்கள்
இன்றைய சந்தை விலையை விடக் குறைவாக இருந்து, வேலை நடக்கும் பொழுது விலை ஏறினால், விலை வேறுபாடு காரணம் தெரிவித்து. மேலும் பணம் வசூல் செய்வார்கள்.

கட்டுமான முறையில் பிறழ்வு:

  உதாரணம் : Roof Slab கணம் 5” (125MM)கொடுக்கப்படும். ஆனால், உங்கள் கட்டிடத்திற்கு 6” (150MM) கணம் தேவைப்பட்டால் அதிகப் பணம் வசூல் செய்யப்படும் அல்லது 5” (125MM)கணம் போட்டு விடுவர். அது தவறான கட்டுமான முறை.