Powered By Blogger

Sunday 29 May 2016

இரவில் விபத்தைத் தவிர்க்க ஒளிரும் சாலை

16-1463381417-solar-powered-cement-01.jp


   தெருவிளக்குகள் பொருத்தமுடியாத இடங்களுக்கும் பொருத்தமான ஒளிரும் தன்மை கொண்ட சிமென்ட் சாலைகண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

 பொறியாளர் குழு மெக்சிகோ நாட்டிலுள்ள மிகோவாகேன் பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் இந்த சாலையை கண்டுபிடித்துள்ளனர்.

      ஒளிரும் சிமென்ட் ஒளியை உமிழும் தன்மை கொண்ட சிமென்ட் ஒன்றை இந்த மிகோவாகேன் பல்கலைகழக பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

 சூரியமின்சக்தி இந்த பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் ஒளிரும் தன்மை கொண்ட சிமென்ட் பகல் நேரத்தில் சூரிய ஒளியிலிருந்து மின்சக்தியை சேமித்துக் கொண்டு இரவில் ஒளிரும்.

16-1463381427-solar-powered-cement-03.jp

    வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களை உறுத்தாத வகையிலும், கண் கூச்சத்தை ஏற்படுத்தாத அளவுக்கு இதன் நீலம் மற்றும் பச்சை வண்ணத்தின் ஒளிரும் தன்மையையும், பிரகாசத்தையும் கூட்டிக் குறைக்க முடியும்.

 ஆயுள் பொதுவாக நீங்கள் கடிகாரத்தில் பார்க்கும் ஒளிரும் தன்மையுடைய பொருட்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆயுட் காலம் கொண்டது. ஆனால், இந்த ஒளிரும் தன்மை கொண்ட சிமென்ட் நூறாண்டுகளுக்கும் மேலாக ஒளிரும் தன்மையை இழக்காது.

16-1463381437-solar-powered-cement-05.jp

  இந்த ஒளிரும் சிமென்ட்டை உருவாக்கும் திட்டத்தில் இடம்பெற்றிருந்த பொறியாளர் ஜோஸ் கார்லோஸ் ரூபியோ கூறுகையில், " 9 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தை கையிலெடுத்தோம். கடின முயற்சிக்கு பின் இந்த சிமென்ட்டை உருவாக்கியிருக்கிறோம். இந்த சிமென்ட்டுடன் நீர் கலக்கும்போது ஜெல் போன்று மாறிவிடும்.


16-1463381447-solar-powered-cement-07.jp

காப்புரிமை மணல், களிமன் மற்றும் தூசுகளால் உருவாக்கப்படும் இந்த சிமென்ட் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும். இந்த சிமென்ட்டிற்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறது. உலக அளவில் இந்த சிமென்ட்டை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் இந்த பொறியாளர் குழு ஈடுபட்டிருக்கிறது.


Monday 16 May 2016

கட்டுமான விரிசலை சீரமைக்கும் புதிய முறைகள்







ட்டுமானங்களின் வலிமையை அசைத்து பார்க்கும் அசாத்திய தன்மை கொண்டவை விரிசல்கள். கட்டுமானத்தின் அடிப்பகுதியிலும் ஏற்படும் விரிசல் ஒட்டுமொத்த கட்டுமானத்தின் உறுதி தன்மையையும் கேள்விக்   குறியாக்கி விடும். 


குடியிருப்புகளின் அருகில் இருக்கும் மரங்கள், குளங்கள், ஈரத்தன்மையான நிலப்பரப்புகள் போன்றவை விரிசலை அதிகப்படுத்துவதில் பங்கெடுத்துக்கொள்கின்றன.  கட்டுமானத்துறையை நவீன தொழில்நுட்பங்கள் வளப்படுத்தி வருவதை தொடர்ந்து விரிசல்களை சரிசெய்யும் முறையிலும் புதுமைகள் புகுந்திருக்கின்றன. பொதுவாக விரிசல்கள் வீட்டின் தாங்கு திறனை உருகுலைக்க கூடியவை. சுவர்களையும், அஸ்திவாரங்களையும் பாதிப்படைய செய்யும் விரிசல்களை வால் ஜாக்கிங், ஹட்ராலிக் பம்பிங் போன்ற முறைகளில் சரிசெய்ய முடியும். 

வால் ஜாக்கிங் (கலவை முறை)



வால் ஜாக்கிங் என்பது விரிசல்கள் விழுந்த இடைவெளிகளில் பிரத்தியேக கலவைகளை நிரப்பு இயந்திரங்கள் மூலம் செலுத்தி விரிசல்களை சரிசெய்வதாகும். இந்த முறையில் மணல், சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு சாந்தினை பயன்படுத்துகின்றனர். இதனை கொண்டு விரிசல் இடைவெளிகளை நிரப்புவதால் கட்டுமானம் வலுப்படுத்தப்படுகிறது. 



இது நிரந்தரமான முறை என்பதால் இதனை குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்கு பின்னர் மீண்டும் சரிசெய்ய தேவையில்லை. அதிகபடியான  இடங்களில் இந்த தொழில்நுட்பத்தையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். நீர் தேக்கப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு இவையே சிறந்த முறை. தனிவீடுகள்,  அடுக்குமாடி குடியிருப்புகள் என எல்லா வகையான வீடுகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். 

ஹட்ராலிக் பம்பிங் (இயந்திர முறை) 



இந்த முறை அஸ்திவார விரிசல்களை சரி செய்ய அதிகமாக பயன்படுத்தப்படும் முறையாகும். இந்த முறையில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் கம்பிகளை கொண்டு வீட்டின் அஸ்திவார அமைப்புகளை பலப்படுத்துகின்றனர். இதனால் வீட்டில் ஏற்படும் விரிசல்கள் சரிசெய்யப்படுவதுடன் அஸ்திவாரப்பகுதிகள் பூமியில் பதியாமலும் பாதுகாக்கப்படுகிறது. 



இந்த முறையில் விரிசல்களை சரிசெய்ய குறைந்த நேரமே தேவைப்படுவதால் வல்லுநர்கள் இந்த முறையை பரிந்துரைக்கின்றனர். சிலாப்  முறைகளை ஒப்பிடும் போது இந்த முறையில் செலவுகள் குறைகின்றன. 



ஹட்ராலிக் பம்பிங் முறையை எளிமையாக மேற்கொள்ள சில வழிமுறைகள்:– 



* இந்த முறையில் அஸ்திவாரங்களை பலப்படுத்த அஸ்திவார பகுதியில் 3*4 இன்ச் அளவில் சுமார் 10 இன்சுகளுக்கு பள்ளம் தோண்ட வேண்டும். 



* அடிபரப்பில் திடமான பரப்பு கிடைக்கும் வரை தோன்டுவது ஹட்ராலிக் கம்பிகளை வலுவாக தாங்கிக் கொள்ளும். இந்த முறையில் கட்டிடங்களை ஹட்ராலிக் கம்பிகளை கொண்டு வலுப்படுத்துகின்றனர். இதனை கட்டுமானத்தின் தரைப்பகுதியுடன் இணைத்து  விடுகின்றனர். 



* தரைப்பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மணல் பரப்பிற்கு மாற்றாக புதிய மணல் நிரப்பப்பட்டு அஸ்திவாரப்பகுதி புனரமைக்கப்படுகிறது. 



* இதில் புஷ் பியர்ஸ் என்ற மற்றொரு செயல்பாடும் உள்ளது. இது கட்டிடத்தினை தாங்க கம்பி சுருள் (ஸ்பிரிங்) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பொருத்துவதினால் பியர்ஸ் கம்பிகளுக்கு அழுத்தம் செல்லாமல் ஸ்பிரிங் அமைப்புகளே அழுத்ததை பெற்று கொள்கின்றன.



* இதனை பொருத்தும் போது தரைப்பகுதியில் அழுத்தத்தினை தாங்கக்கூடிய இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் கம்பிகள் வலுவற்ற பகுதியில்  நிறுத்தப்பட்டால் அவை அழுத்தம் அதிகரிக்கும் போது உள்பதியாக வாய்ப்பு உள்ளது.



இதுபோன்ற வழிமுறைகளை பயன்படுத்தி அஸ்திவார விரிசல்களை எளிமையாக சரிசெய்ய முடியும். மேலும் இந்த முறைகளை கட்டுமான நிறுவனங்கள் செய்து தருகின்றன. கட்டுமான நிறுவனங்களின் உதவியின்றி செய்யவிரும்பினால் தரமான ஹட்ராலிக் கம்பிகளை சந்தைகளில் வாங்கி விரிசலை சரி செய்ய வேண்டும்.

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 முக்கிய யோசனைகள்


 
                                              

                                             


பணம் ,நேரம்,பொருள் மிச்சம் செய்யும் RAT TRAP BOND கட்டுமானத்தின் தோற்றம்
* வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
* தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.
* தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
* இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
* வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட்
* தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.
* மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.
* சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
* மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.
* மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
* மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல் :
* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
* செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.
* இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
* கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.
* கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
* மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
* அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
* சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
* செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
* மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
* எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
* பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
* ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
* க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
* எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
* முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
* உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
* தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
* கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
* செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
* நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
* வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
* சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
* கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
* போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.
* அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
* அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
* பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
* லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
* ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
* கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
* தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.
* வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.
* உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்
வீடு கட்டும் முன் ..
முக்கியத்துவமான டிப்ஸ்கள்
———————————————————–
மனையை சீரமைத்தல், மரம் செடி கொடிகளை நடுதல், மண் பரிசோதனை, குடிநீர் பரிசோதனை மேற்கொள்ளுதல், அஸ்திவாரப் பணிகளின்போது கரையான் மற்றும் பலவித பூச்சிகளை ஒழிக்க வல்ல பெஸ்ட் கன்ட்ரோல் என்கிற பூச்சி தடுப்பு முறையை மேற்கொள்ளுதல் ஆகியனவற்றை வீடு கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முதற்கட்டப் பணிகள் என வகைப்படுத்துகிறார்கள் கட்டிட வல்லுனர்கள். அது குறித்த ஆலோசனைகள் இதோ:
* நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நிலத்தில் உள்ள மண் எத்தகைய தன்மைகொண்டது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்மேல் கட்டப்படும் கட்டடத்தைத் தாங்கக் கூடிய சக்தி அதற்கு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
* தரை மட்டத்திற்குக் கீழ் உள்ள மண் அடுக்குகளின் அமைப்பு எத்தகையதாக இருக்கிறது? பளுவைத் தாங்குமா? உள்ளுக்குள் அமிழ்ந்து போக வைக்குமா? உறுதி எப்படி? பாறைகள் நிறைந்திருக்குமா? தண்ணீர் தேங்குமா? களிப்பாகித் தொல்லை தருமா? நீரை உறிஞ்சுமா? தேக்கி வைக்குமா? தரைக்குள் நீர் உள்ளே நுழைய அனுமதிக்குமா? உள்ளே நுழையும் நீர் தங்கி இருக்குமா?
வடிகால் வசதி எப்படி? வெறும்கால்களால் நடந்து போக ஏற்றதா? மேற்பரப்பில் காணப்படுவதைப்போலவே எவ்வளவு ஆழத்திற்கு அதே மண் இருக்கும்? என்பதையெல்லாம் நன்கு ஆராய வேண்டும்.
* மேலும், இந்தப் பகுதியில் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைக்க வசதிப்படுமா?ஆழ்துளைக் கிணறுதான் பொருத்தமாக இருக்குமா? எவ்வளவு ஆழத்தில் நீர் கிடைக்கும்? மண்ணின் வகை என்ன? வண்டலா? களிமண்ணா? குறுமண்ணா? மணலா? சவுடா?மண்ணுக்குள் நச்சுத் தன்மை கொண்ட ஊடுருவல் நடந்திருக்கிறதா? அதைத் தடுக்க முடியுமா? நச்சுத் தன்மை கொண்ட மண்ணை மாற்றி அமைக்க வழி இருக்கிறதா?கறையான் முதலிய தொந்தரவுகள் வராமல் இருக்குமா? புற்று வளருமா? மரம், செடி கொடிகளை வளர்க்க ஏற்றதா? வீட்டுத் தோட்டம் பலன் தருமா?கட்டுமானத்தை உறுதியாக்குவதற்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளுக்கு அதிகம் செலவு வைக்குமா? கட்டி முடித்த பின் கழிவு நீர் வெளியேற்றத்திற்கு உதவுமா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
* தரையின் உறிஞ்சும் தன்மை எப்படி?தரைப் பரப்பை மூட வேண்டியது அவசியமா? அப்படியே விட்டுவைக்க ஏற்றதா? கான்கிரீட், ஓடு, கல் பாவ வேண்டுமா? அதற்கு அதிகம் செலவு வைக்குமா?கன ரக இயந்திரங்களைக் கொண்டு வந்து இயக்க வசதிப்படுமா? இயந்திரங்களுக்கான தாங்கிகளை அமைக்க இடம் கொடுக்குமா? முளைகளை அடித்து இறக்குவதற்கு ஏற்ற இறுக்கம் கிடைக்குமா? என்பதையும் நன்கு சோதித்து அறியுங்கள்.
* ஆரம்ப கட்ட மண் பரிசோதனை முயற்சிகளுக்குச் சங்கடப்பட்டுக்கொண்டு விட்டுவிடாதீர்கள். சில ஆயிரம் செலவழித்து மண் பரிசோதனை மேற்கொண்டால் அதுதான் உங்கள் கனவு வீட்டின் உண்மையான அஸ்திவாரம்.
மீஅதே போன்று நிலத்தடி நீர் பரிசோதனையும் மேற்கொள்ளத் தவறாதீர்கள். நிலத்தடி நீர் நன்றாக அமைந்துவிட்டால் உங்கள் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தண்ணீரை வெளியிலிருந்து வாங்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* பெஸ்ட் கன்ட்ரோல் தரமாக அமையும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அஸ்திவாரப் பணிகளுக்கு முன்பும், பின்பும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வகையான பெஸ்ட் கன்ட்ரோல் முறைகளைப்பற்றி நிபுணர்களிடம் கேட்டறிந்து செயல்படுத்துங்கள்.
முக்கிய குறிப்பு:-
பணம் ,நேரம்,கட்டுமானப்பொருள் மிச்சம் செய்யும் RAT TRAP BOND கட்டுமானம் மற்றும் இதர வழிமுறைகளைப் பற்றிய மேலதிக தகவல்களைறிய

Friday 13 May 2016

சுவர்களில் விரிசல்கள் ஏற்பட காரணங்கள்





ட்டிட அமைப்புகள் சரியான திட்டமிடலுடன் கட்டப்பட்டிருந்தாலும் குறைபாடுகள் அவற்றில் உண்டாவது பொதுவான ஒன்று. கட்டிடம் எதுவாக இருந்தாலும் அதில் வரக்கூடிய விரிசலை கட்டுமான பொறியாளர்கள் தொழில்நுட்ப குறைபாடாகத்தான் பார்க்கிறார்கள். தக்க தொழில்நுட்ப ஆலோசனைகளுடன் கட்டமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் பிற வகை கட்டிடங்களில் கூட அவ்வப்போது விரிசல் என்ற சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. 


தற்போதைய அவசரமான காலகட்டத்தில் எல்லோரும் சரியான கட்டுமான தொழில்நுட்ப ஆலோசனை பெற்ற பின்புதான் வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்கிறார்கள் என்பது நிச்சயமில்லை. வேலையாட்களின் அவசர மனநிலை, வேலை பற்றிய முன் அனுபவம் இல்லாதது, தொழில்நுட்ப அறிவு பெறாதது ஆகிய மனித குறைபாடுகளும் கட்டிட விரிசலுக்கு காரணமாக உள்ளன. கட்டிட விரிசல்கள் வருவதற்கு என்ன காரணம்..? என்பது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.



1. விரிசலுக்கு சுற்றுப்புற வெப்ப நிலை மாற்றமும் ஒரு காரணமாக உள்ளது. வெயில் காலம், மழை அல்லது பனி மூட்டம் இருக்கும் காலங்களில் அமைக்கப்படும் சுவர்கள், கான்கிரீட் அமைப்புகளை கூடுதலாக கவனிக்க வேன்டும். காரணம் அவற்றின் ‘செட்’ ஆகும் தன்மை அதற்கு தகுந்த மாதிரி வேறுபடும்.



2. சுவர்கள் கட்டமைக்கப்பட்ட பிறகு அவை இறுகுவதற்கு ஊற்றப்படும் தண்ணீர் உப்புத்தன்மை இன்றி இருப்பது அவசியம். நீரில் கலந்துள்ள உப்பு சிமெண்டுடன் வேதிவினைக்கு உள்ளாகி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சுத்தமான தண்ணீரை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.



3. சுவர்களுக்கு தண்ணீர் போதுமான அளவு ஊற்றியிருக்க வேண்டும். தண்ணீர் அளவு குறைவாகிவிட்டாலும் விரிசல் ஏற்பட்டுவிடும். வேலையாட்கள் தவிர மற்றவர்களும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.



4. சிமெண்ட் மணல் கலவையானது நீர் விடுவதற்கு முன்பும், நீர் விட்ட பின்பும் நன்றாக கலக்கப்பட வேண்டும். சிமெண்டு மணல் கலவையானது சரியாக இருக்க வேண்டும்.



5. சிமெண்டில் சரியான கிரேடை பயன்படுத்தாமல் விட்டால் விரிசல்கள் வரும். சிமெண்டு விலையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் நல்ல கிரேடு சிமெண்டா.? என்பதையும் கருத்தில் கொள்வது முக்கியம்.



6. பழைய கட்டிடத்தோடு புதிய கட்டிடத்தை இணைக்கும்போது தகுந்த ‘பாண்டிங் கெமிக்கல்’ உதவியுடன் இணைக்க வேண்டும். சாதாரண சிமெண்டு வகை பூச்சுகள் அதற்கு பொருந்தாது.



7.கட்டிடத்தில் உண்டாகும் ‘பில்டிங் ஜாயிண்ட் எக்ஸ்பான்ஸன்’ காரணமாகவும் விரிசல் வரலாம். அவற்றை உடனே தக்க ‘கெமிக்கல்’ கலவை கொண்டு சரி செய்து விட வேண்டும்.



8. கான்கிரீட் கம்பிகள் நீர்க்கசிவு பிரச்சினையால் துரு பிடிப்பதால் அதனாலும் விரிசல்கள் வரலாம். கம்பிகள் கட்டும்போதே அதற்கான ‘ரஸ்ட் புரூப்’ முறைகளை கையாள வேண்டும்.



9. வெளிப்புற சுவர்கள் மற்றும் மேல்கூரைகளுக்கு ‘வாட்டர் புரூப்’ பெயிண்ட் அடிக்காமல் விட்டாலும் விரிசல்கள் வரலாம். தக்க விதத்தில் அதை கையாண்டால் நீர்க்கசிவால் விரிசல்கள் வருவது தடுக்கப்படும்.

நீர்க்கசிவை தடுக்கும் ‘பாலிமர்’ பூச்சு

வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த பணத்தில், தங்களது கனவு இல்லத்தைக் கட்டுபவர்கள், அந்த வீடு நீண்ட காலம் நிலைத்துநிற்க வேண்டுமென்று விரும்புவார்கள். வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் காரணங்களை கண்டறிந்து முன்கூட்டியே அவற்றை தவிர்த்துவிட்டால், நிச்சயமாக வீட்டின் ஆயுள்காலத்தை அதிகப்படுத்த முடியும்.

வெயில் காலத்தில் அதிக வெப்பம், மழைக்காலத்தில் அதிக ஈரம் என்று மாறி மாறி வீடுகள் பாதிப்புக்கு ஆளாகின்றன. இதனால் கட்டிடங்கள் விரைவிலேயே பழுதடைய ஆரம்பிக்கின்றன. கட்டுமானத்தை சேதப்படுத்துவதில் முதலிடம் வகிப்பது நீர்க்கசிவுதான். 

நீர் கசியும் இடங்கள்


அடுக்குமாடி கட்டிடங்களின் அடித்தளத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதி, மொட்டை மாடி, நவீன குளியலறைகள், நீச்சல் குளம் ஆகிய பகுதிகளில் நீர்க்கசிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சுவர்களில் உள்ள இடைவெளிகள், கவனத்தோடு செய்யப்படாத சிமெண்டு பூச்சு, மொட்டை மாடியில் உள்ள சிறு துளைகள் ஆகியவை நீர்க்கசிவிற்கு முக்கியமான காரணங்களாகும்.

இந்த பகுதிகளில் கட்டுமானப் பணிகளின்போதே பாலிமர் பூச்சுகளைப் பயன்படுத்தி நீர்க்கசிவை முற்றிலுமாக தடுக்கமுடியும். Êசதுர அடிக்கு பத்து ரூபாய் செலவு செய்வதன் மூலமாக, வருங்காலத்தில் பழுது பார்ப்பதற்காக செலவு செய்யும் பல ஆயிரங்களை மிச்சப்படுத்த  முடியும்.

பாலிமர் பூச்சு

அதிகளவிலான மழையாலும், வீட்டிற்குள் அமைந்திருக்கும் குளியலறையின் ஈரத்தாலும் கான்கிரீட் பீம்கள் பலத்தை இழக்கின்றன. ஈரத்தால் பாதிக்கப்பட்ட சுவர்கள் கட்டுமானத்தின் கான்கிரீட் பகுதிகளை வலிமையிழக்க செய்கின்றன 
தண்ணீரை அதிகமாக பயன்படுத்தும் குளியலறையிலும், திறந்தவெளி பால்கனிகளிலும் பாலிமர் பூச்சைப் பயன்படுத்தி நீர்க்
கசிவை தடுக்க முடியும்.

‘எலெஸ்டோமெரிக் பாலிமர்’

வெளிப்புற சுவர்களுக்கு ‘எலெஸ்டோமெரிக் பாலிமர்’ பூச்சுகளைப் பயன்படுத்தலாம். இவை சுவர்களில் உள்ள சிறு விரிசல்களை சரிசெய்வதோடு, விரிசல்களில் பூஞ்சை மற்றும் ஆல்கா வளர்வதையும் தடுத்து நிறுத்துகிறது.

பாலியூரித்தேன்

மேற்கூரையில் ஏற்படுத்தும் நீர்க்கசிவை தடுப்பதற்கு பாலியூரித்தேன் என்ற ரசாயனப் பொருளை ஸ்ப்ரே செய்யலாம். மேற்கூரையில் பாலியூரித்தேன் ஒரு உறைபோல படிந்து நின்று பாதுகாக்கும். அடித்தளங்களில் ஏற்படும் நீர்க்கசிவை தடுப்பதற்கு பாலியூரித்தேனை துளைகளின் வழியாக உள்ளே செலுத்தவேண்டும்.

சிமெண்ட் பூச்சையும், அதன்மீது பூசுகிற வண்ணங்களையும் கொண்டு மட்டுமே நீர்க்கசிவையும் ஈரத்தையும் தடுத்துநிறுத்திவிட முடியாது. கூடுதலாக நீர்க்கசிவை தடுப்பதற்கான பூச்சுகளையும் பயன்படுத்த வேண்டும். அவை தரை, சுவர், கூரை என அனைத்தையும் ஒரு கவசம்போல பாதுகாப்பு  அளிக்கும் விதமாக இருக்கவேண்டும்.

உங்கள் வீட்டுக்கு கட்டிட வரைபடம் வேண்டுமா ?




படிமம்:House Plan.jpg


     நண்பர்களே உங்கள் வீட்டுக்கு கட்டிட வரைபடம் வேண்டும் என்று ஒரு பொறியாளரிடம் கேட்கும்பொழுது நீங்கள் அவருக்கு தெரிவிக்க வேண்டியது உங்கள் மனையின் நீளம், அகலம் திசையுடன், சாலை உள்ள திசை மிக முக்கியம். உங்கள் மனை சரிசதுரம் இல்லாமல் இருப்பின் அதன் இரு மூலைகளுக்கு (குறுக்கு) உள்ள நீளம் முக்கியம்.
   அதன் பின் உங்களது தேவைகள் அறைகளின் நீளம், அகலம், என்ன என்ன அறைகள் தேவை பிற்பாடு உங்கள் கட்டிடத்தின் விரிவாக்கம், மேல்தளம் விரிவாக்கம் இவை அனைத்தும் திறந்த மனதுடன் தெரிவித்தல் அவசியம்.

     மற்றும் உங்கள் கட்டிடம் சாலை மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரம்/தாழ்வு நிலையில் இல்லது அதன் அருகே கிணறு, ஆறு, வாய்கால் இருப்பின் அது அமைத்துள்ள இடம் உங்கள் மனைக்கும் அதக்கும் உள்ள தொலைவு, அருகே உள்ள கட்டிடம் அதன் உயரம் இவை அனைத்தும் கருத்தில் கொண்டு இயற்கையில் கிடைக்கும் பஞ்சபூதத்தில் இலவசமாக கட்டிடத்தில் பெரும் வாஸ்து முறையில் அமைக்க வேண்டிய கட்டிட வரைபடம் தயாரிக்க பொறியாளருக்கு மிக எளிது.
    மேலும் கட்டிட உரிமையாளர் கட்டிடம் கட்ட ஆகும் செலவை சரியான முறையில் தயார் செய்தது இறுதி முடிவு செய்த கட்டிட வரைபடதிக்கு கணக்கிடு செய்வது இருவருக்கும் மிக நல்லது கால நேரம் விரையம் தவிர்ப்போம்.

இன்று ஒரு தகவல் (2)






       வீட்டில் ஜன்னல் வைக்கும் முன்பு படத்தில் காட்டியுள்ளவாறு கான்கிரீட் போடுவதன் மூலம் ஜன்னலின் இரண்டு பக்க மூலைகளில் ஏற்படும் விரிசலை தவிர்கலாம்.

இன்று ஒரு தகவல்

  
                    
                              

   பெரும்பாலான வீடுகளில் ஜன்னல் உள்ள சுவர்களில் இது போல விரிசல்கள் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஜன்னலின் நான்கு மூளைகளிலும் மரத்தால் காது வைப்பதே ஆகும். ஜன்னலின் பிடிமானத்திற்காக இது போன்று வைக்கின்றனர். பருவநிலைக்கு ஏற்ப மரத்தின் தன்மை மாறுபடும். இதனால் மழைக்காலங்களில் மரங்கள் விரிவடைக்கின்றன இதனால் விரிசல்கள் ஏற்படுகின்றன.
நீர்க் கசிவைத் தடுக்க

                                               

    கட்டுமானப் பணிகளின்போதே நீர்க்கசிவையும் வெடிப்புகளையும் தடுக்க இப்போது புதிய வழிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது கான்கிரீட்டுடன் இந்தக் கலவையைச் சேர்க்கும்போது அந்தக் கலவைக்குள் நீர் புகாமல் தடுக்க முடியும். இந்தக் கலவையின் பெயர் பெனிட்ரான் அட்மிக்ஸ் (Penetron Admix).
   பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைக் கான்கிரீட்டுடன் கலப்பதில் எந்த விகிதத்தைக் கடைப்பிடிப்பது என்று கேள்வி எழும். 100 சதவீத கான்கிரீட்டின் சிமெண்ட் தன்மைக்கு 0.8 சதவீதம் கலந்தால் போதுமானது. தண்ணீர்க் கசிவுத் தடுப்புக்காகப் பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. ஏற்கனவே இடப்பட்ட கான்கிரீட்டுகளின் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம். ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம். மேலும் இது மிகச் சிக்கனமான முறை.
       பெனிட்ரான் அட்மிக்ஸ் பல சோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்த் தொட்டிகளில் இந்தக் கலவையைப் பயன்படுத்தி பலன் அடைந்திருக்கிறார்கள். இந்தக் கலவையைப் பயன்படுத்திய பிறகு நீர்க் கசிவு குறைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
  மேலும் இந்தக் கலவை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள் போன்ற இடங்களில் கட்டுமானங்கள் எல்லாம் நீருக்குள் மூழ்கிக் கிடக்கும். அதனால் கட்டுமானக் கம்பிகளுக்குள் நீர் புகுந்து கம்பிகளை அரித்து விடும். அதனால் கட்டுமானம் மிக எளிதில் சேதமடைந்துவிடும். பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் இதைத் தடுக்க முடியும்.

                         

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது



1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.
அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.

தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).

1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.

1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.

கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.

7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.

சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

இது மட்டுமா 7 வருடம் கோவில் கேட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும். அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.

ஒரு வேலை ராஜராஜ சோழனோ இல்லை மற்ற முத்த கட்டிடக்கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்.

கிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன்படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும். அதே போல் கற்களை நெம்பிதூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக்காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்.

தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது, கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50km தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.

இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது.7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் ( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.

1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்க்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் தேவாலயம் இல்லை. மருத்துவம்,பொருளாதாரம்,
கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு.

என் அடுத்த பதிவில் எந்த ஒரு Modern Technologyயின் உதவியும் இல்லாமல் க்ரானைட் கற்களை மிக சாதுரியமாக சோழர்கள் கையாண்ட தொழில்நுட்பத்தை பகிர்கிறேன்.

தஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழிவர்மன் (எ) ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுக்க பரப்புவோம்.